இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்வது அவசியம்

இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்வது அவசியம்

Update: 2022-10-01 12:04 GMT

திருப்பூர்

தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது 2022-23-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும்.

தற்போது விவசாயிகள் இந்த சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளதால் இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே அனைத்து பயன்களும் வழங்க முடியும். இதனால் விவசாயிகள் http:/tnhorticulture.tngov.in/tnhortnet/registration-new.php என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத்தெரியாத, முடியாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

----

Tags:    

மேலும் செய்திகள்