பெண் தற்கொலை

தேவதானப்பட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-26 16:17 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்து பட்டியை சேர்ந்தவர் அரசி (வயது 56). கடந்த சில மாதங்களாக இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் ேநாய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று அரளி விதையை(விஷம்) அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்