2 குழந்தைகளுடன் பெண் மாயம்

கள்ளக்குறிச்சியில் 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

Update: 2022-06-22 17:38 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கொளஞ்சியப்பன் மகள் ஆர்த்திஸ்வரி(வயது 35). இவருக்கும், தாமோதரன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஷ்வாணிஸ்ரீ(10), அக்‌ஷிதாஸ்ரீ(6) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து ஆர்த்திஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் கள்ளக்குறிச்சி கணக்குப்பிள்ளை தெருவில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஆர்த்திஸ்வரி தனது இரு குழந்தைகளுடன் திடீரென மாயமானார். இது குறித்து அவரது தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்