கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலய தேர்த்திருவிழா தொடக்கம்

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலய தேர்த்திருவிழா தொடக்கம்

Update: 2022-07-03 13:14 GMT

கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் 49-ம் ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் 49-ம் ஆண்டு திருவிழா கொடியை தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் ஏற்றி வைத்தார். முன்னதாக ஆலயத்தில் பங்குதந்தை இசையாஸ் முன்னிலையில், நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுதிருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் தேர்த்திருவிழாவின் நிறைவு நாளில் வாண வேடிக்கையுடன், பாத்திமா அன்னையின் தேர் பவனி நகர வீதிகளில் வலம் வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்