தண்டவாளத்தில் விவசாயி பிணம்

விருத்தாசலத்தில் தண்டவாளத்தில் விவசாயி பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-18 19:47 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 38), விவசாயி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலையில் சிவக்குமார் விருத்தாசலம் -கடலூர் வழித்தடத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்சினையின் காரணமாக சிவக்குமார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்