மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி சாவு

தேவதானப்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலியானார்.

Update: 2023-03-26 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள நல்லகருப்பன்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 33). விவசாயி. கடந்த 22-ந்தேதி இவர், தேவதானப்பட்டியில் இருந்து மோட்டார்சைக்கிளில் நல்லகருப்பன்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் தருமலிங்கபுரம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க சரவணகுமார் பிரேக் போட்டார். இதில் நிலை தவறி மோட்டார்சைக்கிளில் இருந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேவதானப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்