நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

நெல்லை - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-02 01:25 GMT

நெல்லை,

நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெல்லை சந்திப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடைகிறது. இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடைகிறது.

இந்த நிலையில், சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06030) இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06029) இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) திங்கட்கிழமைகளில் மட்டும் இயங்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்