நாகர்கோவில்-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

நாகர்கோவில்-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-05 02:01 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில்-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.06012) ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து நள்ளிரவு 11.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் சென்றடையும். பின்னர் மறுநாள் பகல் 11.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.06011) திங்கட்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் சென்றடையும். பின்னர் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்