சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-27 19:35 GMT

சமூக சீர்கேட்டுக்கு காரணமாக இருக்கும் மது, போதை பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.குணசேகரன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சி.எம். சின்னசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் ஆர். பி. சந்திரசேகரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சின்னத்துரை, வடக்கு மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிக்காதே, குடிக்காதே குழந்தைகளின் எதிர்காலத்தை கெடுக்காதே. மூடிவிடு, மூடிவிடு மது ஆலைகளை மூடிவிடு. போதை பொருட்களை தடை செய். போராடுவோம், போராடுவோம் மதுவிலக்கு அமல் படுத்தும் வரை போராடுவோம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி மதுவிலக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்