மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-05 19:23 GMT

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) திருச்சி பெருநகர் வட்டகிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். வட்ட பொருளாளர் பழனியாண்டி, கோட்ட பொறுப்பாளர்கள் உள்பட மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 2019-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத்தொகையுடன் உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் நாகராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்