கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக செயல்படுத்தி தமிழ்நாட்டிற்கான நியாயமான காவிரி நீர்ப் பங்கீட்டினைப் பெற வேண்டும்.

Update: 2024-03-13 10:09 GMT

சென்னை ,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்திய அரசு கேட்டாலும் கூட தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் தர முடியாது என்று எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலான கர்நாடக காங்கிரஸ் முதல்-மந்திரி சித்தராமையாவின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது.

கோடைக்காலம் நெருங்குகின்ற இந்த வேளையில், தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது , நீரை பெற திராணி அற்ற இந்த விடியா அரசின் முதல்-அமைச்சர் தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, தன்னுடைய கூட்டணி கட்சி முதல்-மந்திரியை கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக செயல்படுத்தி தமிழ்நாட்டிற்கான நியாயமான காவிரி நீர்ப் பங்கீட்டினைப் பெறுமாறு வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்