திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கரம்பை திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

Update: 2023-05-17 20:30 GMT

மெலட்டூர்:

பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதைமுன்னிட்டு கோவத்தகுடி அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக சென்ற கோவிலை அடைந்தனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கரம்பை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்