ஜேடர்பாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

ஜேடர்பாளையம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

Update: 2022-09-16 18:45 GMT

பரமத்திவேலூர்:

மோகனூர் தாலுகா மணப்பள்ளி அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராதாமணி (47). கணவன், மனைவி கடந்த 11-ந் தேதி சோழசிராமணி அருகே தேவம்பாளையத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சதாசிவம் ஓட்டினார். ராதாமணி பின்னால் அமர்ந்திருந்தார்.

கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது குறுக்கே ஓடி வந்த நாய் ஒன்று மோட்டார் சைக்கிளில் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கணவன், மனைவியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராதாமணி மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ராதாமணி சிகிச்சை பலனின்றி இறந்தார். காயம் அடைந்த சதாசிவம் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்