கிருஷ்ணகிரியில் வாகனம் மோதி மூதாட்டி பலி

கிருஷ்ணகிரியில் வாகனம் மோதி மூதாட்டி பலி

Update: 2022-09-14 17:10 GMT

கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்ன பீரன். இவருடைய மனைவி கெம்பம்மா (வயது 62). இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காந்தி நகர் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் கெம்பம்மா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கெம்பம்மா இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்