பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

சேலம் சித்தனூர் ஆவின் பால் பண்ணை முன்பு பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-19 18:45 GMT

இரும்பாலை

சேலம் சித்தனூர் ஆவின் பால் பண்ணை முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அரியாக்கவுண்டர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி பசும்பால் லிட்டருக்கு ரூ.45-ம், எருமை பால் லிட்டருக்கு ரூ.54 எனவும் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்