கூலித்தொழிலாளி மர்ம சாவு

Update: 2023-06-21 19:00 GMT

நாகரசம்பட்டி அருகே உள்ள என்.தட்டக்கல்லை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 29). கூலித்தொழிலாளி. கடந்த 18-ந் தேதி காலை சோமார்பேட்டை சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்