சூளகிரி அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து முதியவர் சாவு

Update: 2023-06-20 19:45 GMT

சூளகிரி

சூளகிரி அருகேயுள்ள தியாகரசனப்பள்ளியை சேர்ந்தவர் சிக்கதிம்மய்யா (வயது 70). விவசாயி. இவர் நேற்று முன்தினம், வீட்டின் முன்பு நடந்து சென்றபோது அங்குள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிக்க திம்மய்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்