மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

ஓசூரில் கட்டிட பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2023-02-21 18:45 GMT

மத்திகிரி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஜிட்டாண்டஅள்ளி பக்கமுள்ள பாபுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி மாலை ஓசூரில் சிவக்குமார் நகரில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சக்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்