கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானான்.

Update: 2022-06-01 19:18 GMT

மதுரை, 

மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் அன்பரசன் (வயது 14). நேற்று மாலை இவர் யானைமலை கல்குவாரி குட்டையில் தேங்கியுள்ள நீரில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு சென்று அன்பரசன் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்