தர்மபுரி அருகேமின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பலி

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.

Update: 2023-09-25 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் தாக்கியது

தர்மபுரி அருகே உள்ள கீழ்கன்னிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. கட்டிட மேஸ்திரி. இவருடைய மகன் ஹரி (வயது 16). முக்கல் நாயக்கன்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் மின் மோட்டாரை இயக்குவதற்கு சென்றார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்ற சிலர் ஹரி மயக்கம் அடைந்து கிடப்பதை பார்த்தனர்.

மாணவர் பலி

இதுபற்றி குமாரசாமிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ஹரியை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு ஹரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளாபானு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்