நெல்லை தாமிரபரணி ஆற்றில் முதியவர் பிணம்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2023-06-16 19:00 GMT

நெல்லை சந்திப்பு கணேசபுரம் தாமிரபரணி ஆற்றில் நேற்று காலையில் முதியவர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவருக்கு சுமார் 65 வயது இருக்கும் என்றும், அவர் ஆற்றில் குளிக்க வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்