ரூ.1½ கோடிக்கு பருத்தி ஏலம்

Update: 2023-06-03 16:22 GMT


மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனை நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 752 ேபர் பருத்தி கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் பருத்தியை கொள்முதல் செய்தனர். அதன்படி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.7,369-ற்கும், குறைந்தபட்சவிலை ரூ.5,500-ற்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1 கோடியே 53 லட்சத்து 81 ஆயிரத்து 156-க்கு ஏலம் போனது. இந்த தகவலை திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சுரேஷ் பாபு தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்