கபடி போட்டியில் தகராறு; நடுவர் மீது வழக்கு

கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக நடுவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-01-08 20:04 GMT

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே வைராவிகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை மகன் ராமலிங்கம் (வயது 32). கபடி வீரரான இவர் சம்பவத்தன்று செட்டிகுளம் கிராமத்தில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்றார். அப்போது அங்கு நடுவராக பணியாற்றிய கண்ணன் தவறான முடிவு அளித்ததாக கூறி, அவரை ராமலிங்கம் கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போட்டி முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிய ராமலிங்கத்தை கண்ணன் வழிமறித்து அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமலிங்கம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததால், இதுதொடர்பாக கோர்ட்டில் முறையிட்டு மனுதாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், கண்ணன் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்