சென்னை முதல் பரந்தூர் வரை 100 அடியில் சாலை அமைத்தாலே விமான நிலையம் வந்ததாக அர்த்தம் - டி.ஆர்.பாலு

சென்னை முதல் பரந்தூர் வரை 100 அடியில் உலகத்தரம் வாய்ந்த சாலை அமைத்தாலே விமான நிலையம் வந்ததாக அர்த்தம் என நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

Update: 2022-08-23 11:50 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.

பின்னர், நிருபர்களிடம் கழக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தற்போது உள்ள விமான நிலையம் 2027 ஆம் ஆண்டிற்குள் அதிக அளவு பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதாலும், புதிய கட்டமைப்பு தேவைப்படுவதாலும் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படுகிறது.

நடைமுறைப்படுத்தும் போது சென்னை - பரந்தூர் வரை உலகத்தரம் வாய்நத சாலை அமைக்கப்பட்டாலே விமான நிலையம் வந்ததாக அர்த்தம். இந்த சாலை 100 அடி சாலையாக அமைக்கப்படால் சென்று வர வசதியாக அமைய சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு என்பது இருக்கத்தான் செய்யும் எனவும் பாரம்பரியமாக வாழ்ந்து வருவதால் இப்பிரச்சினை நிலவுவதாகவும், அதற்கு உரிய தீர்வும் காணப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்களின் கருத்து கேட்புக்கூட்டம், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும், திட்ட செயல்பாட்டு வழிமுறைகளும் முறையாக பின்பற்றி மிக விரைவில் திட்டம் செயல்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்