காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-10-06 17:37 GMT

அரியலூர் காமராஜர் சிலை எதிரே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பா.ஜ.க. தொடர்ந்து பல பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், எதிர்க்கட்சியினர் மீது தொடர்ந்து சோதனை என்ற பெயரில் பொய் வழக்கு போடுவது மற்றும் அவர்களை சிறையில் அடைப்பதாகவும் கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்