கோவை கார் வெடி விபத்து எதிரொலி - சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

கோவை கார் வெடி விபத்து எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-10-23 14:21 GMT

சென்னை,

கோவையில் இன்று காலை காரில் எடுத்து சென்ற 2 சிலிண்டர்களில் ஒரு சிலிண்டா் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் வந்த நபர் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை கார் வெடி விபத்து எதிரொலியாக சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு 3 அடுக்கிலிருந்து 5 அடுக்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் கண்காணித்து, சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் கூடுதலாக வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் வரவழைக்கப்பட்டு, பயணிகளின் உடமைகள், காா் பாா்க்கிங் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி மத்திய தொழில் பாதுகாப்புபடையினருக்கு கூடுதல் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்