ரிஷிவந்தியம் அரசுபள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்

மாநில ஆக்கி போட்டியில் பங்கேற்பு: ரிஷிவந்தியம் அரசுபள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்

Update: 2023-01-20 18:45 GMT

ரிஷிவந்தியம்

பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஆக்கிபோட்டியில் கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்ட அளவில் ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர். தொடர்ந்து இவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஆக்கி போட்டியிலும் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் முரளிதரன் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் ஹரிஹரன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் மாதவன், உதவி தலைமை ஆசிரியர்கள் கவிதா, உமாராணி, உடற்கல்வி ஆசிரியர்கள் பாலு, வைத்தீஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்