விவசாயி, டாஸ்மாக் விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு

மதுபாட்டிலுக்கு அதிக விலை கேட்டதாக தகராறு: விவசாயி, டாஸ்மாக் விற்பனையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-05-28 13:42 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சனிசந்தை கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி (வயது 48) என்பவர் மதுபாட்டில் வாங்க வந்தார். அப்போது டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருந்து வரும் பாளையம்புதுார் கிராமத்தை சேர்ந்த சிவகுமார் (40) என்பவர், பழனிசாமியிடம் மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் மதுபாட்டிலால் தாக்கி கொண்டதில் சிவகுமார், பழனிசாமி காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் மற்றும் பழனிசாமி மீது தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்