கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி காந்தி சாலையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து பேசினார்

Update: 2023-06-11 19:00 GMT

கிருஷ்ணகிரி காந்தி சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் முகாமை தொடங்கி வைத்து பேசினார். இதில் நகராட்சி ஆணையாளர் வசந்தி, துப்புரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர்கள் உதயகுமார், மாதேஸ்வரன், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் கொசுப்புழு உற்பத்தி தடுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் கொசு உற்பத்தி தவிர்ப்பது எளிது, கொசுக்களை கட்டுப்படுத்துவது நம் கையில் உள்ளிட்ட தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் கொசு ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்