சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-17 18:45 GMT

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்பிலியபட்டி பகுதியை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 22). மரம் வெட்டும் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக சைல்டு லைன் மூலம் கிடைத்த தகவலின் பெயரில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் சுகுணா குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் சீரங்கன் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்