கோமுகி ஆற்றங்கரையில் வாலிபர் பிணம்

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையில் வாலிபர் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2023-03-16 16:27 GMT

கள்ளக்குறிச்சி

மர்ம சாவு

கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலையில் கோமுகி ஆற்றங்கரை பகுதியில் உள்ள மரப்பட்டறையின் பின்னால் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த இஸ்மாயில் மகன் சர்புதீன்(வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சர்புதீன் எவ்வாறு இறந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொன்று உடலை வீசி சென்றனரா? அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோமுகி ஆற்றங்கரை பகுதியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்