பா.ஜ.க. பிரமுகர் கொலை: குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு - சிவகங்கையில் பரபரப்பு

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற வசந்த் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

Update: 2024-07-29 15:28 GMT

சிவகங்கை,

பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்டச் செயலாளராக இருந்தவர் வேலாங்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 53). இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை இளையான்குடி சாலையில் சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விசாரணையின்போது வசந்த் என்ற நபர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இதில் சார்பு ஆய்வாளர் பிரதாப் காயமடைந்தார். இதையடுத்து போலீசார் வசந்த் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த நிலையில் படுகாயமடைந்த காவலர் மற்றும் குற்றவாளி இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்