மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை

பர்கூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜையை செல்லக்குமார் எம்.பி. பணியை தொடங்கி வைத்தார்.

Update: 2023-02-25 18:45 GMT

பர்கூர்

பர்கூர் பேரூராட்சி 12-வது வார்டு துரைஸ் நகரில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை நடந்தது.செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் செந்தில்குமார், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சேகர், தி.மு.க. நகர செயலாளர் வெங்கட்டப்பன், காங்கிரஸ் நகர தலைவர் யுவராஜ், வக்கீல் அசோகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுபாஷினி, கார்த்திகேயன், ஆகாஷ், மருதமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்