வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு

வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.

Update: 2023-03-21 18:30 GMT

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். பின்னர் விளைந்தவுடன் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை சுமை ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை ரூ.5ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை ரூ.2 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. தற்போது வெள்ளைக்கொடி வெற்றிலை சுமை ஒன்று ரூ.14 ஆயிரத்திற்கும் கற்பூரி வெற்றிலை ரூ.6 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை ரூ.3 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. வரத்து குறைந்ததால் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்