ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படை சிறைபிடித்த 17 பேரை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் நேற்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-16 18:45 GMT

ராமேசுவரம்

இலங்கை கடற்படை சிறைபிடித்த 17 பேரை விடுவிக்கக்கோரி ராமேசுவரத்தில் நேற்று விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

17 மீனவர்கள் சிறையில் அடைப்பு

இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்துவது, தாக்குவது, விரட்டியடிப்பது, சிறைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளால் தமிழக மீனவர்கள் அச்சத்துடனேயே கடலுக்கு சென்றுவரும் நிலை உள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து சமீபத்தில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 17 மீனவர்களையும், அவர்களின் 3 விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் துறைமுக பகுதியில் அணிவகுத்து நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்