மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள நிறுவனங்களுக்கு விருது

மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-07-05 12:55 GMT

சென்னை,

கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ல் விருதுகள் வழங்கப்படும் என்றும் விருதாளர்களுக்கு தலா 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்