நல்லூர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்

நல்லூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம் அடைந்தார்.

Update: 2022-06-23 11:19 GMT

கந்தம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள மாரப்பம்பாளையத்தை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சுரேஷ் (வயது21). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

சுரேஷின் அக்கா கருந்தேவம்பாளையத்தில் வசித்து வருகிறார். இங்கு சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் வசித்து வரும் லோகநாதன் என்பவரின் மகள் புனித மணி(21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. புனித மணி கந்தம்பாளையத்தில் அமைந்துள்ள மகளிர் கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோட்டின் மலை அடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து இருவரின் பெற்றோர்களை அழைத்து பேசி சமாதானம் செய்த போலீசார், கல்லூரி மாணவி புனித மணியை

சுரேஷ் குடும்பத்தாருடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்