ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

தேனி அன்னஞ்சியில் ஆட்டோ டிரைவரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-10-02 18:45 GMT

தேனி அன்னஞ்சி மூணுசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 21). ஆட்டோ டிரைவர். நேற்று இரவு இவர், வடபுதுப்பட்டியில் ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கிண்டல், கேலி செய்து தகராறில் ஈடுபட்டனர். இதை சந்தோஷ் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சந்தோசை உருட்டு கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் சந்தோஷ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அவர் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை தாக்கிய நபர்களை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்