மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-21 20:25 GMT

திருவேங்கடம்:

திருவேங்கடம் போலீசார் திருவேங்கடத்தை அடுத்துள்ள ஆவுடையார்புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது பெருங்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் ராமர் பாண்டி என்பதும், சட்டவிரோதமாக விற்பதற்காக 65 மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்