தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக உள்ள 23 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு

தி.மு.க.வின் 23 அணிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2022-12-31 14:28 GMT

சென்னை,

தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக உள்ள 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களாக துணை பொதுச்செயலாளர்களை நியமித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி விவசாய அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியும், மாணவர் அணி, இளைஞர் அணி, சட்டத்துறை அணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சுற்றுச்சூழல் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை உள்ளிட்ட 5 அணிகளுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழியும், பொருளாளர் அணி, வர்த்தக அணி உள்ளிட்ட 4 அணிகளுக்கு துணை பொதுச்செயலாளர் பொன்முடியும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் மேலும் 4 அணிகளுக்கு துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்