இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-01 18:50 GMT

கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கரூர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணிடத்திற்கு தகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ வருகிற 4-ந்தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம், முதல்தளம், அறைஎண்.114, கரூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட தகவல் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்