பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2022-09-07 19:57 GMT

ஒரத்தநாடு

ஒரத்தநாடு அரசு போக்குவரத்து பணிமனை எதிரே அரசு வணிக வளாக கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் செங்கதிர். இவரது மனைவி பகவதி (வயது42). இவர் நேற்று காலை மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்களில் ஒருவர் கடையிலும், மற்றொருவர் கடைக்கு எதிரே உள்ள பட்டுக்கோட்டை தஞ்சை மெயின் சாலையில் மோட்டார் சைக்கிளிலும் நின்று கொண்டிருந்தார். அப்போது பகவதியிடம் பொருட்கள் வாங்குவது போல் பேச்சு கொடுத்து கொண்டே அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்