முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புனித மரியன்னை பள்ளி விடுதி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-28 20:26 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி விடுதியில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரையிலும் தங்கியிருந்து படித்த முன்னாள் மாணவர்களின் 2-ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி விடுதி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அருட்சகோதரர் ஜோசப் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற ஏராளமான முன்னாள் மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை கவுரவித்தனர். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்