முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆம்பூர் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Update: 2023-01-23 18:10 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பாவில் நகராட்சி தொடக்க பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் கடந்த 1990-1991-ம் கல்வி ஆண்டில் 5-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்படி பள்ளி வளாகத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்களும் பங்கேற்றனர். மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்