முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பணகுடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-12-08 19:22 GMT

பணகுடி:

பணகுடி திருஇருதய உயர்நிலைப்பள்ளியில் 1988-1989-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற முன்னாள் மாணவ- மாணவிகள் 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. அருட்சகோதரர் ஆரோக்கியம் பீற்றர் தலைமை தாங்கினார். திருஇருதய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்மிர் முன்னிலை வகித்தார். திருஇருதய பள்ளிகளின் அதிபர் அருட்சகோதரர் சேசு அருளானந்தம் ஆசியுரை வழங்கினார். விழாவில் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பிறகு அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்