முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சாயர்புரம் போப் நினைவு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Update: 2022-08-16 17:55 GMT

சாயர்புரம்:

சாயர்புரத்தில் அமைந்துள்ளது போப் நினைவு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 1983-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக கற்பித்த ஆசிரியர்கள் மார்ட்டின், தங்கராஜ், சாமுவேல் ராஜ், ஜேக்கப் டேவிட், ராஜ்குமார் அகதாஸ், டேவிட் சாமுவேல், ராமச்சந்திரன், விக்டர், தனசிங் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

விழாவில் ஒவ்வொருவரும் தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர் மாணவர் சாம்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்