கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெறாவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை

கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் உரிமம் பெறாவிட்டால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-04-08 18:30 GMT

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மலக்கசடு மற்றும் கழிவு மேலாண்மை தேசிய கொள்கையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், மலக்கசடு மற்றும் கழிவு நீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை ஒழுங்குப்படுத்த விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மற்றும் டிரெய்லர்களின் செயல்பாடுகளை ஒழுங்குப்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசால் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நகராட்சி மூலம் 2 ஆண்டுகள் செல்ல தக்க உரிமம் வழங்கப்படும். இதற்கான பதிவு கட்டணம் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பாக இயக்கப்பட வேண்டும். எனவே கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாக நகராட்சியில் உரிமம் பெற்று வாகனங்களை இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் முன்அறிவிப்பு ஏதுமின்றி நகராட்சியால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் நீதிமன்றத்தின் மூலம் வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்