சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவி தொகையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம்

சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவி தொகையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-12-11 18:30 GMT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் அப்துல் நாசர் தலைமை தாங்கினார். இதில் அமைப்பின் மாநில செயலாளர் முகம்மது ஒலி கலந்து கொண்டு வருகிற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி திருச்சியில் நடைபெற உள்ள பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு குறித்து பேசினார். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வியைப் பறிக்கும் விதமாக மெட்ரிக் உதவி தொகை எனும் 1 முதல் 8 வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை ரத்து செய்த ஆளும் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், வருகிற ஜனவரி மாதத்தில் மாவட்டம் மற்றும் அனைத்து கிளைகள் சார்பில் மாபெரும் சமுதாய பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடத்தப்படும். பிப்ரவரி மாதம் 5-ந்தேதி தேதி திருச்சியில் நடைபெறவுள்ள பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அனைவரும் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்