ரெயில் மோதி நர்சு பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி நர்சு பலி

Update: 2023-09-06 20:35 GMT

தக்கலை,

தக்கலை அருேக தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி நர்சு பரிதாபமாக இறந்தார்.

தனியார் ஆஸ்பத்திரியில் வேலை

தக்கலை அருகே உள்ள வாளோடு பகுதியை சேர்ந்தவர் அய்யாத்துரை. இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது18). டிப்ளமோ நர்சிங் படித்துள்ள இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று வேலைக்கு சென்றவர் பணி முடிந்த பின் மாலையில் நாகர்கோவிலில் இருந்து அரசு பஸ் மூலம் ஆலங்கோடு பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தார்.

ரெயில் மோதியது

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ரெயில் மோதியது. இதில் ஐஸ்வர்யா சம்பவ இடத்திலே உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்