பெருந்திரள் முறையீட்டு மனு

பெருந்திரள் முறையீட்டு மனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-08-19 18:45 GMT

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நிகழ்ச்சி நடைபெற்றது. சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் மலைச்சாமி, செயலாளர் சிதம்பரம் தலைமையில் ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் எஸ்.புதூர் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையீட்டு மனுவை வழங்கினர். வரையறுக்கப்பட்ட ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்களில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பி முறையீட்டு மனுவாக வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் கலாராணி மற்றும் எஸ்.புதூர் ஒன்றிய சத்துணவு சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்